செய்திகள்
டி.கே.ரங்கராஜன்

ஒரு மொழி, ஒரு நாடு பா.ஜனதா முயற்சி சாத்தியமாகாது: டி.கே.ரங்கராஜன் பேட்டி

Published On 2019-10-21 10:46 GMT   |   Update On 2019-10-21 10:46 GMT
ஒரு மொழி, ஒரு நாடு என்ற நிலையை கொண்டு வர பா.ஜனதா முயற்சிக்கிறது. இந்த முயற்சி சாத்தியமாகாது என்று டிகே ரங்கராஜன் கூறியுள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டியில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே. ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

பொருளாதார, சமூக நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு இந்த நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகிறது. நாட்டில் எதிர் கட்சிகளே இல்லாமல் செய்யும் பணியை பாரதீய ஜனதா செய்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு இனம், ஒரு கட்சி என்ற நிலையை கொண்டு வர பா.ஜனதா முயற்சிக்கிறது. பாரதீய ஜனதாவின் இந்த முயற்சி சாத்தியமாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் காமராஜ், பொன்னுதாய், பத்ரி, ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News