செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

வேலை நாட்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது-செங்கோட்டையன் பேட்டி

Published On 2019-09-06 12:09 GMT   |   Update On 2019-09-06 12:09 GMT
வேலை நாட்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்வியியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட பள்ளி கல்விதுறை சார்பில் போட்டி தேர்வுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.

பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 12 ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும். இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. 70 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்து கொடுக்கப்படும்.

நீட் தேர்வு மட்டுமின்றி அனைத்து வகை போட்டி தேர்வுகளுக்கும் சிறந்த கல்வியாளர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 38.49 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த வருடம் தீவிர பயிற்சி மூலம் 48.57 சதவீத மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு பயிற்சி சென்டர் 412 மையங்கள் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

மேலை நாடுகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் தொழில் சார்ந்த கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி சமுதாய பழக்க வழக்கங்கள் நெறிமுறைகளு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் கல்வி முறை இங்கும் கொண்டு வர முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

நீலகிரியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு அங்குள்ள மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் மெமோவை அனுப்பி உள்ளார். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பவர்கள். வேலை நாட்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பது எனது நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News