செய்திகள்
கொலை

திருமணம் ஆகியும் வேறு வாலிபருடன் பழகியதால் மகளை அடித்து கொன்ற தந்தை

Published On 2019-09-02 13:03 GMT   |   Update On 2019-09-02 13:03 GMT
சேத்தியாத்தோப்பு அருகே திருமணம் ஆகியும் வேறு வாலிபருடன் பழகியதால் மகளை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையான்நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி. அவரது மனைவி ரேவதி (வயது 33).

கடந்த சில நாட்களாக ரேவதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி நேராக தனது மாமனார் கண்ணனிடம் சென்று உங்கள் மகள் நடத்தை சரி இல்லை. அவளுக்கு புத்திமதி சொல்லுங்கள் என்று கூறி ஊருக்கு வந்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த கண்ணன் தனது மகள் ஜோதியை வீரமுடையான் நத்தத்தில் இருந்து வெளியூருக்கு காரில் அழைத்து சென்றார். பின்னர் வீரமுடையான் நத்தத்துக்கு காரில் திரும்பினார். காரில் ரேவதி பிணமாக கிடந்தார். இதனை பார்த்த கிராம மக்களிடம் எனது மகள் திடீர் என இறந்து விட்டாள் என்று கூறினார்.

சந்தேகம் அடைந்த கிராம மக்கள் சேத்தியாதோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் ரேவதியின் தந்தை கண்ணனிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மகளை அடித்து கொன்றதை கண்ணன் ஒப்புக்கொண்டார்.

ரேவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தினேஷ்குமாருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனை அறிந்ததும் தனது மகளை காரில் அழைத்து சென்று கண்ணன் கண்டித்து உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த கண்ணன் கைகளால் ரேவதியை அடித்து உள்ளார். இதில் அவர் இறந்து போனார்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News