செய்திகள்

மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை- தமிழிசை பிரசாரம்

Published On 2019-04-15 12:54 GMT   |   Update On 2019-04-15 12:54 GMT
மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization

நாசரேத்:

தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.

இந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #pmmodi #demonetization  

Tags:    

Similar News