செய்திகள்
பொன்னுத்தாய் (அ.ம.மு.க.)

தென்காசி தொகுதியில் ஒரே பெயரில் போட்டியிடும் 4 பெண் வேட்பாளர்கள்

Published On 2019-04-05 07:47 GMT   |   Update On 2019-04-05 07:47 GMT
தென்காசி மக்களவை தொகுதியில் ஒரே பெயரில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். #LokSabhaElections2019 #TenkasiConstituency
தென்காசி:

தென்காசி மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளராக சு.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். பொன்னுத்தாய் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே பெயரில் உள்ள மேலும் சிலர் தென்காசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அ.ம.மு.க. வேட்பாளர் சு.பொன்னுத்தாய் மட்டுமின்றி, கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.



தனது பெயரிலேயே 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது குறித்து அ.ம.மு.க. வேட்பாளர் சு.பொன்னுத்தாய் கூறும்போது, “தென்காசி தொகுதியில் அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. இந்த போட்டியில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். தி.மு.க.வினர்தான் பொன்னுத்தாய் என்ற பெயரில் உள்ளவர்களை தேடிப்பிடித்து மனுதாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

என் பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அ.ம.மு.க.வின் பரிசுப் பெட்டி சின்னம் ஒரே நாளில் மக்களைச் சென்றடைந்துவிட்டது. அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, எங்கள் வெற்றியை தடுக்க முடியாது” என்றார்.  #LokSabhaElections2019 #TenkasiConstituency



Tags:    

Similar News