செய்திகள்

கொடுமுடி அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து 25 பவுன் நகை கொள்ளை

Published On 2019-03-13 04:33 GMT   |   Update On 2019-03-13 04:33 GMT
கொடுமுடி அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்றார்.

இன்று காலை குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்ச அடைந்தார். வீட்டின் கதவு பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

பதட்டத்துடன் உள்ளே சென்றனர். அங்கு பீரோவும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் மேல்பகுதியில் உள்ள ‘‘கபோர்ட்டை’’ திறந்து பார்த்து உள்ளனர். அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்று உள்ளனர்.

வீட்டில் பழங்கால கடிகாரம் மற்றும் பழங்கால பொருட்கள் இருந்தது. அதனையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்தார். வீட்டில் சி.சி.டி.வி கேமிரா இருந்திருந்தால் கொள்ளையர்கள் உடனே அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லை. எனினும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News