செய்திகள்
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசிய காட்சி.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தல் மிக முக்கியமானது- துரைமுருகன்

Published On 2019-03-02 13:55 IST   |   Update On 2019-03-02 13:55:00 IST
தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடத்தப்படும் இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுகவுக்கு முக்கிய தேர்தல் என துரைமுருகன் பேசியுள்ளார். #LSpolls #DMK #DuraiMurugan
வேலூர்:

வேலூர் மத்திய மாவட்ட, மேற்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இருபெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடத்தப்படும் தேர்தல்.

ஒரு பக்கம் மோடியும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளனர். நாம் ஜனநாயக ரீதியில் கூட்டணி அமைத்துள்ளோம். இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது.

அவர்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து அவர்களது ஆட்சி நடக்கும். நாம் வெற்றிபெற்றால் அடுத்த 25 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியே தொடரும். இதனுடன் டெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போன்றவர்கள் பணத்தை போட்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட 99 சதவீதம் முயற்சி மேற்கொள்வேன். அதனை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக பெற்று வெற்றிக்கனியாக மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #LSpolls #DMK #DuraiMurugan

Similar News