செய்திகள்

மேல் முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே- அமைச்சர் கருப்பணன் பேட்டி

Published On 2019-03-01 15:55 IST   |   Update On 2019-03-01 15:55:00 IST
சுப்ரீம் கோட்டில் தினகரன் மேல் முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ministerkaruppannan #dinakaran #admkleaf

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கப்பாளையத்தில் இன்று மின்ன வேட்டுவபாளையம்-சாலையூர் இடையே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் சுற்றுச்சூழல்த் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி உள்ளது. பரீட்சை எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடத்து உள்ளது. ஒட்டு மொத்த அ.தி.மு.க.வினருக்கும் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டவன் எங்க பக்கம் இருக்கார்.

இதை எதிர்த்து அவர்கள் (தினகரன் அணியினர்) சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்.

ஈரோட்டில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேம்பாலங்களை திறந்து வைத்தார். கோடி கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இப்படி தமிழக முதல்- அமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Similar News