செய்திகள்

நாகையில் புயல் கணக்கெடுக்கும் பணி 157 கிராமங்களில் நிறைவு- அமைச்சர் ஓஎஸ் மணியன் தகவல்

Published On 2018-12-03 06:26 GMT   |   Update On 2018-12-03 06:26 GMT
நாகை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட 181 கிராமங்களில் இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OSManian
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணிணியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள 236 கிராம புறங்களில் 181 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு 82 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 75 கிராமங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. 24 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தித்துறை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #OSManian
Tags:    

Similar News