செய்திகள்

திருமங்கலத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2018-10-12 12:21 GMT   |   Update On 2018-10-12 12:21 GMT
நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்:

திருமங்கலம் தனியார் நர்சிங் கல்லூரியில் 17 வயது சிறுமி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி முடித்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தார். இந் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மலைராஜ் (27) வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில், மாணவி யின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மலைராஜ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News