செய்திகள்
பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றம்
பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. #ponmudimla #dmk
விழுப்புரம்:
தமிழகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நீதிமன்றத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான வழக்குகளின் விசாரணை நடைபெறும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இனி இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும். இதுபோல் பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது. #ponmudimla #dmk