செய்திகள்
கர்நாடகம் செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
ஓசூர்:
பாரத் பந்த் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
இதே போல வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வழக்கமாக தமிழ்நாட்டில் இருந்து 250க்கும் மேற் பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெங்களூரு வரை இயக்கப்படும். இன்று இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.
இதே போல பெங்களூர் - ஓசூர் இடையே இன்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களும், தனியார் பஸ்களும் இயங்கவில்லை. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பஸ்களும் பந்த்தையொட்டி முன் எச்சரிக்கையாக இயக்கப்படவில்லை.
அதேசமயம் இந்த பஸ்கள் இருமாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்பிவிடுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike
பாரத் பந்த் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
இதே போல வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வழக்கமாக தமிழ்நாட்டில் இருந்து 250க்கும் மேற் பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெங்களூரு வரை இயக்கப்படும். இன்று இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.
இதே போல பெங்களூர் - ஓசூர் இடையே இன்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களும், தனியார் பஸ்களும் இயங்கவில்லை. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பஸ்களும் பந்த்தையொட்டி முன் எச்சரிக்கையாக இயக்கப்படவில்லை.
அதேசமயம் இந்த பஸ்கள் இருமாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்பிவிடுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike