செய்திகள்
500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்- அமைச்சர் கேசி வீரமணி வழங்கினார்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.