செய்திகள்

புதிய சீருடைகள் எப்படி உள்ளது? மாணவ-மாணவிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

Published On 2018-07-26 08:04 GMT   |   Update On 2018-07-26 08:04 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அரசு பள்ளிக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மாணவ-மாணவிகளிடம் புதிய சீருடைகள் பற்றி கேட்டறிந்தார். #minister #sengottaiyan
கோபி:

கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று கோபி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கோபி அடுத்த பெரிய கொரவம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு சென்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

அமைச்சர் உள்ளே நுழைந்ததும் மாணவ- மாணவிகள் எழுந்து “வணக்கம் ஐயா” என்று வரவேற்றனர்.

அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். மாணவர்களிடம் “புதிதாக போட்டு இருக்கும் பள்ளி சீருடை எப்படி உள்ளது?” என்று கேட்டார்.

அதற்கு மாணவிகள் நன்றாக இருக்கிறது என்றனர். உடனே அமைச்சர் 2-வது செட் சீருடை விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.

பிறகு அவர் கூறும்போது, “கியூ ஆக் போர்டு” திட்டம் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டத்தை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார். #minister #sengottaiyan
Tags:    

Similar News