செய்திகள்

மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வியாபாரி கைது

Published On 2018-07-25 06:45 GMT   |   Update On 2018-07-25 06:45 GMT
மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #Gutkasmuggling

தருமபுரி:

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை தமிழகத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடந்த 20-ந் தேதி தொப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும், அதனை கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்து டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள வியாபாரி ஒருவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி 2 மினி லாரியில் மதுரைக்கு தருமபுரி வழியாக கடத்தி கொண்டு வரும் போது அவர்கள் பிடிபட்டதால் உடனே தொப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து கர்நாடக மாநிலம் கிளாஸ்பாளையம் மார்க்கெட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் மதின் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் மதுரையில் உள்ள வியாபாரிக்கு இந்த குட்கா பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். உடனே தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து அங்கு வியாபாரியை தேடிவந்தனர்.

நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 32) என்பவர் தான் பெங்களூருவில் 2 லாரிகளில் குட்கா பொருட்களை வாங்கியது தெரியவந்தது. உடனே பன்னீர் செல்வத்தை கைது செய்து செய்து தொப்பூருக்கு அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது25), ராஜதுரை (22) ஆகிய 2 பேரை கைது செயது தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை சேலத்திற்கு கொண்டு செல்வதாக டிரைவர் சக்திவேல் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

உடனே போலீசார் குட்கா வியாபாரியான சேலம் ஓமலூரை சேர்ந்த வரை பிடிக்க அங்கு சென்றனர். அப்போது அந்த வியாபாரி கடையை மூடிவிட்டு தலைமைறவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சேலம் வியாபாரியை தேடிவருகின்றனர். #Gutkasmuggling

Tags:    

Similar News