செய்திகள்
ராசிபுரத்தில் விபத்து- பேத்தி கண்முன்பு தாத்தா பலி
ராசிபுரத்தில் தனியார் பஸ் வளைவில் திரும்பியபோது பேத்தி கண் முன்பு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தாத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராசிபுரம்:
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வியாபாரி. இவரது மகள் பிரின்சிகேரன். இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரின்சிகேரனின் மார்க்சீட் வாங்குவதற்காக அவரது தாத்தா அருள்ஜோசப் (72) மற்றும் மாணவி பிரின்சிகேரன் ஆகியோர் நேற்று இரவு தனியார் பஸ் மூலம் ராசிபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் இன்று காலை சேலம் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரத்திற்கு தனியார் பஸ்சில் ஏறி வந்தனர். அவர்கள் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அருள்ஜோசப் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வளைவில் திரும்பியபோது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோசப் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வியாபாரி. இவரது மகள் பிரின்சிகேரன். இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரின்சிகேரனின் மார்க்சீட் வாங்குவதற்காக அவரது தாத்தா அருள்ஜோசப் (72) மற்றும் மாணவி பிரின்சிகேரன் ஆகியோர் நேற்று இரவு தனியார் பஸ் மூலம் ராசிபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் இன்று காலை சேலம் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரத்திற்கு தனியார் பஸ்சில் ஏறி வந்தனர். அவர்கள் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அருள்ஜோசப் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வளைவில் திரும்பியபோது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோசப் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.