செய்திகள்

திருத்தணி கோவில் ஆன்லைன் காணிக்கை முறையை மாற்றியமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

Published On 2018-07-17 04:05 GMT   |   Update On 2018-07-17 04:05 GMT
திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்படும் காணிக்கை முறையில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #Tiruttanitemple
திருத்தணி:

திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு  வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

ஆனால் ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் காணிக்கைகள் ஒருமாதம் கழித்தே கோவில் கணக்கில் சேருவதாக பக்தர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களிடம் இந்த திட்டத்தை ஒப்படைத்ததே இந்த காலதாமதத்திற்கு காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அரசு,  இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tiruttanitemple
Tags:    

Similar News