செய்திகள்
தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி ஒதுக்கப்படும் - நாராயணசாமி அறிவிப்பு
தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இந்த நிதியாண்டிலாவது அமைத்துத்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கமலகண்ணன், அரசின் நிதி நிலையை பொறுத்து தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.
அப்போது உறுப்பினர் விஜயவேணி, ஒரு தீயணைப்பு வாகனமாவது கொடுங்கள். அதை நாங்கள் கையில் இழுத்துச்சென்றாவது விபத்து நடக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் தனவேலு, அனந்தராமன் ஆகியோர், கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி அளிக்கவுள்ளோம். இதன்மூலம் உரிய தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருவோம். உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இந்த நிதியாண்டிலாவது அமைத்துத்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கமலகண்ணன், அரசின் நிதி நிலையை பொறுத்து தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.
அப்போது உறுப்பினர் விஜயவேணி, ஒரு தீயணைப்பு வாகனமாவது கொடுங்கள். அதை நாங்கள் கையில் இழுத்துச்சென்றாவது விபத்து நடக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் தனவேலு, அனந்தராமன் ஆகியோர், கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி அளிக்கவுள்ளோம். இதன்மூலம் உரிய தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருவோம். உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.