செய்திகள்

சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2018-07-13 03:14 GMT   |   Update On 2018-07-13 03:14 GMT
சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் அரிகரராஜன்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மழை பெய்ததால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த இரும்பு கதவில் மின்சாரம் பரவியது. இந்த நிலையில் இதை அறியாமல் அரிகரராஜன் வீட்டின் கதவை திறந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News