செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2018-07-11 05:07 GMT   |   Update On 2018-07-11 05:07 GMT
இலங்கை கடற்படையயை கண்டித்து 3-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike

ராமேசுவரம்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 186 விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய- மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 9-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

3-வது நாளான இன்றும் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதன் காரணமாக 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. 3 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கிடையில் 2-வது நாளாக இன்றும் பாம்பன், ராமேசுவரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவளத்துரை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். சூறாவளியால் பொரும் பாலான படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ஆனாலும் சில மீனவர்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடலுக்கு சென்றனர். #Fishermenstrike

Tags:    

Similar News