செய்திகள்
துப்பாக்கி சூடு விவகாரம் - கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ThoothukudiFiring
மதுரை:
இந்நிலையில், அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுககு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மனுதாரரின் மனுவிற்கு நாளை மறுநாள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. #ThoothukudiFiring
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுககு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மனுதாரரின் மனுவிற்கு நாளை மறுநாள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. #ThoothukudiFiring