செய்திகள்
தலமலை வனப்பகுதியில் ரோட்டோரம் உள்ள மரத்தில் படுத்திருந்த சிறுத்தை.

தலமலை வனப்பகுதியில் ரோட்டோர மரத்தில் படுத்திருந்த சிறுத்தை

Published On 2018-03-23 15:29 IST   |   Update On 2018-03-23 15:29:00 IST
ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மரத்தில் படுத்திருக்கும் சிறுத்தை எந்த நேரத்திலும் ரோட்டை கடக்கும் என்பதால் ரோட்டில் நடந்து செல்வோர்கள் கவனமாக சொல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் அடர்ந்த வனப்பகுதியை யொட்டி சிறுத்தைகள் அவ்வளவாக வெளியே வருவது கிடையாது. ஆனால் இப்போது சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக ரோட்டோரம் நடமாடுகிறது. பட்டப்பகலில் ரோட்டை கடந்தும் செல்கிறது.

மேலும் அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைந்திருக்கும் சிறுத்தைகள் இப்போது ரோட்டோர மரத்திலும் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து ரோட்டில் வருவோர், போவோரை நோட்டமிட்டு வருகிறது.

திம்பத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் ரோட்டில் தல மலை வனப்பகுதியின் ரோட்டோரம் ஒரு மரத்தில் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

மரத்தில் படுத்திருக்கும் சிறுத்தை எந்த நேரத்திலும் ரோட்டை கடக்கும் ஆதலால் வாகனங்களில் செல்வோர்களும் ரோட்டில் நடந்து செல்வோர்களும் கவனமாக சொல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  #tamilnews







Similar News