செய்திகள்

ஆலங்குடியில் சிலை உடைப்பு - ஈரோடு பெரியார் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2018-03-21 09:49 IST   |   Update On 2018-03-21 09:49:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

பெரியார் சிலை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் இல்லத்துக்கு மீண்டும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அங்கு சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #tamilnews

Similar News