செய்திகள்

சிவகங்கை அருகே காரில் கடத்தி சிறுமி கற்பழிப்பு

Published On 2018-02-12 15:49 IST   |   Update On 2018-02-12 15:49:00 IST
வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை காரில் கடத்திச் சென்று கற்பழித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகா பேரணிப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தாய் மற்றும் உறவினர்களுடன் வீட்டில் இரவில் படுத்திருந்தார்.

அப்போது அங்கு ஒரு காரில் 2 பேர் வந்தனர். அவர்கள் வீடு புகுந்து சிறுமியை எழுப்பினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வெளியே அழைத்து சென்ற அவர்கள் சிறுமியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

சிறிது தூரம் சென்ற நிலையில் சிறுமியை கற்பழித்துவிட்டு வழியில் இறக்கி விட்டுவிட்டு மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews 

Similar News