செய்திகள்
கடலூரில் போலி டாக்டர் கைது: போலீசார் விசாரணை
கடலூரில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
மேலும் அவர் பிறப்பு, இறப்பு சான்றிதழ், உடல் தகுதி சான்றிதழ்களை வழங்கி வந்தார். இது குறித்து பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது.
இதையொட்டி சென்னை மருத்துவப் பணிகளின் இணை இயக்குனர் மோகனன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி, கண்காணிப்பாளர் ஹபீசா மற்றும் மருத்துவக் குழுவினர் வண்டிப்பாளையம் சென்று மதியழகன் நடத்தி வந்த கிளினிக்கை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மதியழகன் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் மதியழகனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு இதேபோன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
மேலும் அவர் பிறப்பு, இறப்பு சான்றிதழ், உடல் தகுதி சான்றிதழ்களை வழங்கி வந்தார். இது குறித்து பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது.
இதையொட்டி சென்னை மருத்துவப் பணிகளின் இணை இயக்குனர் மோகனன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி, கண்காணிப்பாளர் ஹபீசா மற்றும் மருத்துவக் குழுவினர் வண்டிப்பாளையம் சென்று மதியழகன் நடத்தி வந்த கிளினிக்கை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மதியழகன் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் மதியழகனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு இதேபோன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.