செய்திகள்
சத்தியமங்கலம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை: போலீசார் விசாரணை
சத்தியமங்கலம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 38). கூலி தொழிலாளி.
நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடினர்.
ஆனாலும் இரவு முழுவதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ராமாபுரம் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வேலுச்சாமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கொலையுண்டு கிடந்தது வேலுச்சாமிதான் என்பது தெரிய வந்தது.
அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இது பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலுச்சாமியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலுச்சாமியை யாராவது முன் விரோதத்தில் அடித்து கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 38). கூலி தொழிலாளி.
நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடினர்.
ஆனாலும் இரவு முழுவதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ராமாபுரம் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வேலுச்சாமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கொலையுண்டு கிடந்தது வேலுச்சாமிதான் என்பது தெரிய வந்தது.
அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இது பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலுச்சாமியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலுச்சாமியை யாராவது முன் விரோதத்தில் அடித்து கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.