செய்திகள்
நெய்வேலி என்.எல்.சி.யில் மேற்கூரை சரிந்து 11 பேர் படுகாயம்
நெய்வேலி என்.எல்.சி.யில் இன்று மேற்கூரை சரிந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் மின் உற்பத்தி செய்யப்படும் பாய்லர் பகுதியிலும், மேற்கூரை பகுதியிலும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தினால் பணியில் ஈடுபட்டிருந்த 11 தொழிலாளர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு என்.எல்.சி. பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் மின் உற்பத்தி செய்யப்படும் பாய்லர் பகுதியிலும், மேற்கூரை பகுதியிலும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தினால் பணியில் ஈடுபட்டிருந்த 11 தொழிலாளர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு என்.எல்.சி. பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.