செய்திகள்
அ.தி.மு.க. அணிகள் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஆலந்தூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தில் இன்று இரட்டைஇலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.
டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து முழு விவரம் இப்போது தெரியவில்லை. முழு விவரம் தெரிந்த பின்னர் கூறுகிறேன்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தில் இன்று இரட்டைஇலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.
டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து முழு விவரம் இப்போது தெரியவில்லை. முழு விவரம் தெரிந்த பின்னர் கூறுகிறேன்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.