செய்திகள்

தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2017-02-22 07:14 GMT   |   Update On 2017-02-22 07:14 GMT
சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு விமான மூலம் கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்த தாய்லாந்து செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலை தாய்லாந்து செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்துல் பாசிப், முகமது ரியாசுதீன் ஆகியோரது சூட் கேசை சோதனை செய்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர் யூரோ பணம் கடத்தி வந்தது தெரிந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 60 லட்சம் ஆகும். வெளிநாட்டு பணம் குறித்து இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அப்துல்யாசிப், முகமது ரியாசுதீன் ஆகியோரது விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News