செய்திகள்
நாகை மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்
கோடியக்கரையில் மீன்பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பல ஊர்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி பகுதி பெருமாள் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கிருஷ்ணகுமார், லோகநாதன், பிரவீன், பிரசாந்த் ஆகிய 4 பேரும் கடந்த 7-ந்தேதி மாலை மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். நேற்று இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை சுற்றிவளைத்தனர்.
பின்னர் மீனவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டனர். மேலும் அவர்களை உடன் அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.
இதையடுத்து இன்று காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து தமிழக கடலோர காவல்படையினர் மற்றும் மீன்துறை அலுவலர்களிடம் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடைபெற்று வருவதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பல ஊர்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி பகுதி பெருமாள் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கிருஷ்ணகுமார், லோகநாதன், பிரவீன், பிரசாந்த் ஆகிய 4 பேரும் கடந்த 7-ந்தேதி மாலை மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். நேற்று இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை சுற்றிவளைத்தனர்.
பின்னர் மீனவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டனர். மேலும் அவர்களை உடன் அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.
இதையடுத்து இன்று காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து தமிழக கடலோர காவல்படையினர் மற்றும் மீன்துறை அலுவலர்களிடம் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடைபெற்று வருவதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.