செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட விவசாயி மான்துரை.

விருத்தாசலம் அருகே நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2016-12-30 10:18 IST   |   Update On 2016-12-30 10:18:00 IST
விருத்தாசலம் அருகே நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடியை மேற்கொண்டனர். பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர் கருகியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த விவசாயி மான்துரை (வயது 60).

இவர் அதே பகுதியில் உள்ள தனது வயலில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். பருவமழை பெய்யாததால் நெல் விளைச்சல் சரியாக இல்லை. அதிக அளவில் கடன் வாங்கி விவசாயம் செய்திருந்ததால் மான்துரை கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் வயலுக்குச் சென்ற மான் துரை அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மான்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News