செய்திகள்
தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் கோர்ட்டில் ஆஜர்
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தேர்தல் விதிமுறை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் கோர்ட்டில் ஆஜரானார்.
விருத்தாசலம்:
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பாளராக முத்துக்குமார் போட்டியிட்டார். அவரை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் தே.மு.தி.க.மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் பிரசாரம் செய்தார்.
அப்போது தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இதனால் அந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தியதாக சுதீஷ் உள்பட 6 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையொட்டி கோர்ட்டில் சுதீஷ் ஆஜரானார்.