செய்திகள்
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கியால் சுட்டும் மிரட்டல் விடுத்த சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 199 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் திலீப் (வயது 30), பழனிசாமி (42), ராஜன் (40), பிரதீப் (24), பிரசாத் (30), முத்தையன் (50), கலைக்குமார் (34), சரண் (24) ஆகிய 8 பேர் இந்திய கடல் எல்லையில் கடற்கரையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்று வந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்களை பார்த்ததும் அச்சமடைந்த புதுக்கோட்டை மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பி புறப்பட முயன்றனர்.
ஆனால் சற்று தூரத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பேசிய இலங்கை கடற்படை வீரர்கள் யாரும் பயப்படவேண்டாம், நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பயத்தில் திலீப், ராஜன், பிரதீப் ஆகிய 3 மீனவர்களும் கடலுக்குள் குதித்தனர்.
இதையடுத்து மீனவர்க ளின் படகுகளுக்கு அருகில் நெருங்கி வந்த கடற்படையினர் திடீரென கடலில் குதித்த மீனவர்களை நோக்கி கடலுக்குள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர்களை சுற்றி குண்டு மழை பொழிந்தது. இதனால் செய்வதறியாது கடலில் நீந்தியவாறு கதறினர்.
ஆனாலும் இரக்கம் காட்டாத அவர்கள் படகில் ஏறாவிட்டால் தொடர்ந்து சுடுவோம் என்றும் மிரட்டினர். இதற்கிடையே மீனவர்களின் படகுகளில் தாவிக் குதித்த கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை இரும்பு ராடு, கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
மேலும் அந்த படகில் இருந்த மீனவர் பழனிசாமியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். அப்போது கடலில் குதித்த 3 மீனவர்களும் படகில் ஏறினர். அவர்களையும் கைகளை பின்னால் கட்டிய கடற்படையினர் கயிற்றால் அடித்துள்ளனர்.
அத்துடன் மீனவர்கள் 8 பேரின் வாயிலும் உப்பை திணித்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் அய்யப்ப பக்தரான திலீப் என்ற மீனவரின் வாயில் இறந்த மீனை திணித்து சாப்பிடுமாறு சித்ரவதை செய்துள்ளனர்.
இனிமேலும் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என்று கூறிவிட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 8 மீனவர்களும் நேற்று இரவு கரை திரும்பினர். அவர்களை மீட்ட மற்ற மீனவர்கள் மணல்மேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 199 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் திலீப் (வயது 30), பழனிசாமி (42), ராஜன் (40), பிரதீப் (24), பிரசாத் (30), முத்தையன் (50), கலைக்குமார் (34), சரண் (24) ஆகிய 8 பேர் இந்திய கடல் எல்லையில் கடற்கரையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்று வந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்களை பார்த்ததும் அச்சமடைந்த புதுக்கோட்டை மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பி புறப்பட முயன்றனர்.
ஆனால் சற்று தூரத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பேசிய இலங்கை கடற்படை வீரர்கள் யாரும் பயப்படவேண்டாம், நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பயத்தில் திலீப், ராஜன், பிரதீப் ஆகிய 3 மீனவர்களும் கடலுக்குள் குதித்தனர்.
இதையடுத்து மீனவர்க ளின் படகுகளுக்கு அருகில் நெருங்கி வந்த கடற்படையினர் திடீரென கடலில் குதித்த மீனவர்களை நோக்கி கடலுக்குள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர்களை சுற்றி குண்டு மழை பொழிந்தது. இதனால் செய்வதறியாது கடலில் நீந்தியவாறு கதறினர்.
ஆனாலும் இரக்கம் காட்டாத அவர்கள் படகில் ஏறாவிட்டால் தொடர்ந்து சுடுவோம் என்றும் மிரட்டினர். இதற்கிடையே மீனவர்களின் படகுகளில் தாவிக் குதித்த கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை இரும்பு ராடு, கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
மேலும் அந்த படகில் இருந்த மீனவர் பழனிசாமியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். அப்போது கடலில் குதித்த 3 மீனவர்களும் படகில் ஏறினர். அவர்களையும் கைகளை பின்னால் கட்டிய கடற்படையினர் கயிற்றால் அடித்துள்ளனர்.
அத்துடன் மீனவர்கள் 8 பேரின் வாயிலும் உப்பை திணித்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் அய்யப்ப பக்தரான திலீப் என்ற மீனவரின் வாயில் இறந்த மீனை திணித்து சாப்பிடுமாறு சித்ரவதை செய்துள்ளனர்.
இனிமேலும் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என்று கூறிவிட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 8 மீனவர்களும் நேற்று இரவு கரை திரும்பினர். அவர்களை மீட்ட மற்ற மீனவர்கள் மணல்மேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.