செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கார் ‘பார்க்கிங்’ கட்டணம்
புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் கார் பார்க்கிங் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆலந்தூர்:
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர தாமதம் ஆனதால் இது மேலும் அதிகரித்தது.
சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்திற்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயணிகள் கொடுத்ததால் ஊழியர்கள் சில்லரை கொடுக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி முதல் கார் பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
தற்போது புதிய ரூ.2000, ரூ500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் சில்லரை தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் கார் பார்க்கிங் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் கார் பார்க்கிங் கட்டணத்தை ஊழியர்கள் வசூலித்தனர். அவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர தாமதம் ஆனதால் இது மேலும் அதிகரித்தது.
சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்திற்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயணிகள் கொடுத்ததால் ஊழியர்கள் சில்லரை கொடுக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி முதல் கார் பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
தற்போது புதிய ரூ.2000, ரூ500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் சில்லரை தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் கார் பார்க்கிங் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் கார் பார்க்கிங் கட்டணத்தை ஊழியர்கள் வசூலித்தனர். அவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை.