செய்திகள்
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இலங்கை கடற்படை மீது வழக்கு
காரைக்கால், நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த அஞ்சான் மகன் அரவிந்த் (20), காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் கடந்த 16-ந்தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தோட்டாக்கள் பாய்ந்து காயமடைந்த மீனவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மீனவர் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சி செய்ததாக ஒரு படகில் நீல வண்ண சீருடையில் வந்த சுமார் 20 இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.