செய்திகள்

கடலூர் ஜெயிலில் கைதிக்கு பிஸ்கட் பாக்கெட்டுக்குள் மறைத்து கொடுத்த கஞ்சா பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

Published On 2016-10-08 07:11 GMT   |   Update On 2016-10-08 07:11 GMT
கடலூர் ஜெயிலில் கைதிக்கு பிஸ்கட் பாக்கெட்டுக்குள் மறைத்து கொடுத்த கஞ்சாவை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க புதுவையை சேர்ந்த ராம்குமார், அஜித் ஆகிய 2 பேரும் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.

அவர்கள் விநாயகமூர்த்தியை பார்த்து பேசினார்கள். பின்னர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை விநாயகமூர்த்தியிடம் கொடுத்து விட்டுச்சென்றனர்.

சிறைக்காவலர்கள் சந்தேகம் அடைந்து அந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி சோதனையிட்டபோது அதில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பிஸ்கட் பாக்கெட்டையும், கஞ்சாவையும் சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சிறை அலுவலர் ஜெயராமன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ராம்குமார், அஜித், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News