செய்திகள்
தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை: பண்ருட்டியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
பண்ருட்டியில் முன்விரோதம் காரணமாக தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவராஜ் (வயது 57). தி.மு.க. பிரமுகர்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (48) என்பவருக்கும் கடந்த ஒரு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கிறிஸ்துவராஜ் வீட்டில் இருந்தார். அவருடன் அவரது தம்பி செங்கோல்ராஜா, உறவினர்கள் மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரும் இருந்தனர்.
அப்போது சண்முகம் உள்பட 8 பேர் கிறிஸ்துவ ராஜ் வீட்டிற்கு சென்றனர். கிறிஸ்துவராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் இது மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த 8 பேரும் கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் கிறிஸ்துவ ராஜை சரமாரியாக தாக்கினர்.
இதை தடுக்க முயன்ற செங்கோல்ராஜா, மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் கிறிஸ்துவ ராஜ் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்துவராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்குக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துவராஜின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது.
இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பிரமுகர் கொலை தொடர்பாக சண்முகம் அவரது மகன்கள் பாலுமகேந்திரன், ராமச்சந்திரன், உறவினர்கள் தினேஷ்குமார், சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற ராஜீவ்காந்தி, தேவா, சிவராமன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பண்ருட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தி.மு.க. பிரமுகர் கிறிஸ்துவராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எனதிரிமங்கலத்தில் 100-க்கும்மேற் பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவராஜ் (வயது 57). தி.மு.க. பிரமுகர்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (48) என்பவருக்கும் கடந்த ஒரு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கிறிஸ்துவராஜ் வீட்டில் இருந்தார். அவருடன் அவரது தம்பி செங்கோல்ராஜா, உறவினர்கள் மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரும் இருந்தனர்.
அப்போது சண்முகம் உள்பட 8 பேர் கிறிஸ்துவ ராஜ் வீட்டிற்கு சென்றனர். கிறிஸ்துவராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் இது மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த 8 பேரும் கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் கிறிஸ்துவ ராஜை சரமாரியாக தாக்கினர்.
இதை தடுக்க முயன்ற செங்கோல்ராஜா, மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் கிறிஸ்துவ ராஜ் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்துவராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்குக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துவராஜின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது.
இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பிரமுகர் கொலை தொடர்பாக சண்முகம் அவரது மகன்கள் பாலுமகேந்திரன், ராமச்சந்திரன், உறவினர்கள் தினேஷ்குமார், சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற ராஜீவ்காந்தி, தேவா, சிவராமன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பண்ருட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தி.மு.க. பிரமுகர் கிறிஸ்துவராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எனதிரிமங்கலத்தில் 100-க்கும்மேற் பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.