செய்திகள்
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 24 பவுன் கொள்ளை
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 24 பவுன் நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் குடும்பத்தினருடன் கடலூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்து விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சுரேஷ், கொள்ளை நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.