செய்திகள்
67-வது முறையாக விபத்து: சென்னை விமான நிலையத்தில் லிப்ட் கற்கள் உடைந்து விழுந்தன
சென்னை விமான நிலையத்தில் 67-வது முறையாக ‘லிப்ட்’ சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் 67-வது முறையாக ‘லிப்ட்’ சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒருமுறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.யும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 67-வது முறையாக விபத்து நடந்துள்ளது. மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளுக்கு பயணிகள் செல்ல ‘லிப்ட்’ வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளம் பகுதியில் ‘லிப்ட்’ அறையின் சுவற்றில் சலவை கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
2 அடி அகலமும் 7 அடி நீளமும் கொண்ட இந்த கற்களில் 5 கற்கள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் 67-வது முறையாக ‘லிப்ட்’ சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒருமுறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.யும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 67-வது முறையாக விபத்து நடந்துள்ளது. மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளுக்கு பயணிகள் செல்ல ‘லிப்ட்’ வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளம் பகுதியில் ‘லிப்ட்’ அறையின் சுவற்றில் சலவை கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
2 அடி அகலமும் 7 அடி நீளமும் கொண்ட இந்த கற்களில் 5 கற்கள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.