செய்திகள்

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு பெண் கவுன்சிலர் மகனுடன் குடிநீர் வழங்க கோரி தர்ணா

Published On 2016-08-11 14:50 IST   |   Update On 2016-08-11 14:50:00 IST
செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு பெண் கவுன்சிலர் மகனுடன் குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டம் நடத்தினார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு பழவேலி, மாமண்டூர், ஒழலூர் பகுதியில் இருந்து கிணறுகள் மூலம் குடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நகராட்சி பகுதி முழுவதும் சரிவர குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சந்தியா இன்று காலை தனது மகன் உதயகுமாருடன் செங்கல்பட்டு நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் நித்யா மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர் சந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து கவுன்சிலர் சந்தியா கூறும் போது, செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதே போல் குப்பைகள் அள்ளப்படாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது என்றார்.

Similar News