செய்திகள்
தேவகோட்டை அருகே 3 வயது மகனுடன் இளம்பெண் கொடூர கொலை: போலீசார் விசாரணை
தேவகோட்டை அருகே 3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண், துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லலை அடுத்துள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணந்தங்குடி தெற்குத்தெரு ஆனந்தன் மகள் ராஜாத்தி என்ற முத்துலட்சுமி (வயது35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், 3 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
அழகு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் புதுக்குடியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஹரிசுடன் வெளியே சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தாய், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. கணவர் அழகுவும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவரும் மனைவி-மகனை தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து முத்துலட்சுமியின் மாமனார் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்லல் அருகே குரண்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது, 3 சாக்குமூடைகள் மிதந்தன.
இதுகுறித்து அவர்கள் கல்லல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் கல்லல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த 3 சாக்குமூடைகளை வெளியே எடுத்தனர்.
அதனை பிரித்து பார்த்த போது ஒரு சாக்குமூடையில் கால்கள் இல்லாத ஒரு பெண்ணின் உடலும், மற்றொரு மூடையில் 2 கால்களும், 3-வது சாக்கு மூடையில் சிறுவனின் பிணமும் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண்-சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தினார்கள். மேலும் கடந்த சில வாரங்களில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அப்போது 14-ந்தேதி முத்துலட்சுமி தனது மகனுடன் மாயமானது தெரியவர, அவரது கணவர், உறவினர்களை வரவழைத்தனர். அவர்கள் உடல்களை பார்த்ததில் மாயமான முத்துலட்சுமி, ஹரிஷ்தான் கிணற்றில் பிணமாக கிடந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.
3 வயது குழந்தையுடன் மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்-மகனை கொலை செய்து விட்டு பெண்ணின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி சாக்கில் வைத்து அதனை பெரிய கற்களால் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.
எதற்காக தாய்-மகன் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லலை அடுத்துள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணந்தங்குடி தெற்குத்தெரு ஆனந்தன் மகள் ராஜாத்தி என்ற முத்துலட்சுமி (வயது35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், 3 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
அழகு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் புதுக்குடியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஹரிசுடன் வெளியே சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தாய், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. கணவர் அழகுவும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவரும் மனைவி-மகனை தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து முத்துலட்சுமியின் மாமனார் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்லல் அருகே குரண்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது, 3 சாக்குமூடைகள் மிதந்தன.
இதுகுறித்து அவர்கள் கல்லல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் கல்லல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த 3 சாக்குமூடைகளை வெளியே எடுத்தனர்.
அதனை பிரித்து பார்த்த போது ஒரு சாக்குமூடையில் கால்கள் இல்லாத ஒரு பெண்ணின் உடலும், மற்றொரு மூடையில் 2 கால்களும், 3-வது சாக்கு மூடையில் சிறுவனின் பிணமும் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண்-சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தினார்கள். மேலும் கடந்த சில வாரங்களில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அப்போது 14-ந்தேதி முத்துலட்சுமி தனது மகனுடன் மாயமானது தெரியவர, அவரது கணவர், உறவினர்களை வரவழைத்தனர். அவர்கள் உடல்களை பார்த்ததில் மாயமான முத்துலட்சுமி, ஹரிஷ்தான் கிணற்றில் பிணமாக கிடந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.
3 வயது குழந்தையுடன் மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்-மகனை கொலை செய்து விட்டு பெண்ணின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி சாக்கில் வைத்து அதனை பெரிய கற்களால் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.
எதற்காக தாய்-மகன் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.