செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல்

Published On 2016-07-21 17:20 IST   |   Update On 2016-07-21 17:20:00 IST
கடலூர் மத்திய சிறைச்சாலையில் இன்று சிறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதி ஒருவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் மத்திய சிறைச்சாலையில் இன்று சிறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது சிறை அறையில் கைதி ஒருவர் மறைமுகமாக நின்று செல்போனில் பேசினார். இதைப்பார்த்த சிறை அலுவலர் வாசுதேவன் உடனே அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தார்.

செல்போன் பயன்படுத்தியவர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா வேளப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்ற விஜி(வயது 27) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வினோத்துக்கு எப்படி செல்போன் வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து தொடர்ந்து செல்போன் சிக்குவது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News