செய்திகள்
வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ காட்சி: போதையில் கும்மாளமிட்ட தனிப்படை ஏட்டு இடமாற்றம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு குடிபோதையில் ரவுடிகளுடன் கும்மாளமிடுவது போன்ற காட்சி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக பரவி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
காவல் துறையில் தனிப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவர்கள் கொடுக்கும் தகவல்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பிரிவு போலீசார் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
ஆனால் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு குடிபோதையில் ரவுடிகளுடன் கும்மாளமிடுவது போன்ற காட்சி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக பரவி பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் செல்வபாண்டியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுடன் சேர்ந்து குடித்ததாக தெரிகிறது.
அப்போது அவர் மயங்கி விழுந்தார். தற்போது அந்த காட்சிகள் வீடியோவில் வாட்ஸ்-அப் தகவல்களாக வெளிவருகின்றன. இது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்-அப் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தனிப்பிரிவு ஏட்டு செல்வபாண்டியனை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர்.
இந்தநிலையில் சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி கடந்த 16-ந்தேதி இரவு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எஸ்.பி.கோவில் தெரு, சிதம்பரம்- சீர்காழி சாலை, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கீழ வீதிக்கு வந்த போது, அவர்களை செல்லவிடாமல் சிதம்பரம் நகர போலீசார் தடுத்தனர்.
மேலும் 16 கால் மண்டப தெரு வழியாக செல்லுமாறு போலீசார் கூறினர். இதற்கு தேர்பவனியில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தடையை மீறி தேர்பவனி கீழவீதி வழியாக சென்று, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.
இதையடுத்து, போக்குவரத்து இடையூறு செய்ததாக பங்குதந்தை சூசை, செயலாளர் ஆரோக்கியசாமி, துணை செயலாளர் மோகன் ஆகிய 3 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு முன்கூட்டியே சரியான தகவலை சிதம்பரம் நகர போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
இந்த இருசம்பவங்களும் கடலூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையில் தனிப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவர்கள் கொடுக்கும் தகவல்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பிரிவு போலீசார் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
ஆனால் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு குடிபோதையில் ரவுடிகளுடன் கும்மாளமிடுவது போன்ற காட்சி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக பரவி பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் செல்வபாண்டியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுடன் சேர்ந்து குடித்ததாக தெரிகிறது.
அப்போது அவர் மயங்கி விழுந்தார். தற்போது அந்த காட்சிகள் வீடியோவில் வாட்ஸ்-அப் தகவல்களாக வெளிவருகின்றன. இது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்-அப் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தனிப்பிரிவு ஏட்டு செல்வபாண்டியனை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர்.
இந்தநிலையில் சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி கடந்த 16-ந்தேதி இரவு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எஸ்.பி.கோவில் தெரு, சிதம்பரம்- சீர்காழி சாலை, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கீழ வீதிக்கு வந்த போது, அவர்களை செல்லவிடாமல் சிதம்பரம் நகர போலீசார் தடுத்தனர்.
மேலும் 16 கால் மண்டப தெரு வழியாக செல்லுமாறு போலீசார் கூறினர். இதற்கு தேர்பவனியில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தடையை மீறி தேர்பவனி கீழவீதி வழியாக சென்று, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.
இதையடுத்து, போக்குவரத்து இடையூறு செய்ததாக பங்குதந்தை சூசை, செயலாளர் ஆரோக்கியசாமி, துணை செயலாளர் மோகன் ஆகிய 3 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு முன்கூட்டியே சரியான தகவலை சிதம்பரம் நகர போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
இந்த இருசம்பவங்களும் கடலூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.