செய்திகள்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தரிசனம் செய்ய வந்த போது எடுத்த படம்.

தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை: கருணாநிதியின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது -தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2016-07-20 15:44 IST   |   Update On 2016-07-20 15:44:00 IST
பண்ருட்டியில் தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுவது குறித்து கருணாநிதி தெரிவித்துள்ள விமர்சனம் கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கோவில்களில் சிலை திருட்டு நடந்துள்ளது. இதற்கு இந்து சமய அறநிலைத்துறை பொறுப்பேற்று காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து திரும்ப அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டும்.

தபால் நிலையங்களில் கங்கைநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்த கருணாநிதியின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது.

சுவாதி கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கும் போது, திருமாவளவன் கூறி வரும் கருத்து வழக்கை திசை திருப்பும் விதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News