செய்திகள்
பவானிசாகர் அணை 42 அடியை தொட்டது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை கடந்த 10 நாட்களாக 40 அடியை தாண்டி 42 அடியாக உயர்ந்து இருந்தது.
ஈரோடு:
அணைக்கு சராசரியாக 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 41 அடியில் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவிலிருந்து அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி அணைக்கு தண்ணீர் வரத்து லேசாக அதிகரித்து உள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 984 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் வாய்க்காலில் 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
41 அடியில் ஒருவார காலமாக இருந்த பவானி சாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணியளவில் 42 அடியை தொட்டது.