செய்திகள்
செக் மோசடி வழக்கு: என்.எல்.சி. ஊழியருக்கு 6 மாதம் ஜெயில்
செக் கொடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் என்.எல்.சி. ஊழியருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து பண்ருட்டி குற்றவியல் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி தாலுகா வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்.
இவரிடம் நெய்வேலியில் வசிக்கும் என்.எல்.சி. நிரந்தர ஊழியரான செல்வக்குமார் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார்.
அவர் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வகையில் ரூ.4 லட்சத்துக்கான வங்கி காசோலையை கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி வல்லம் செல்வக்குமாரிடம் கொடுத்தார்.
அந்த காசோலைக்கு வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதால் அது திரும்பி விட்டது.
எனவே வங்கியில் பணம் இல்லாமலேயே செக் கொடுத்து மோசடி செய்ததாக நெய்வேலி செல்வக்குமார் மீது வல்லம் செல்வக்குமார் பண்ருட்டி போலீசில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி சரவணபாபு விசாரித்து, நெய்வேலி செல்வக்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், மேலும் வல்லம் செல்வகுமாருக்கு தரவேண்டிய ரூ.4 லட்சத்தை 2 மாதத்துக்குள் திரும்ப செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.
பண்ருட்டி தாலுகா வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்.
இவரிடம் நெய்வேலியில் வசிக்கும் என்.எல்.சி. நிரந்தர ஊழியரான செல்வக்குமார் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார்.
அவர் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வகையில் ரூ.4 லட்சத்துக்கான வங்கி காசோலையை கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி வல்லம் செல்வக்குமாரிடம் கொடுத்தார்.
அந்த காசோலைக்கு வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதால் அது திரும்பி விட்டது.
எனவே வங்கியில் பணம் இல்லாமலேயே செக் கொடுத்து மோசடி செய்ததாக நெய்வேலி செல்வக்குமார் மீது வல்லம் செல்வக்குமார் பண்ருட்டி போலீசில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி சரவணபாபு விசாரித்து, நெய்வேலி செல்வக்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், மேலும் வல்லம் செல்வகுமாருக்கு தரவேண்டிய ரூ.4 லட்சத்தை 2 மாதத்துக்குள் திரும்ப செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.