செய்திகள்
வேதாரண்யம் கடற்பகுதியில் சூறைக்காற்று: 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யம் கடற்பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடும் சூறைக்காற்றால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.
45 நாட்கள் தடைகாலம் முடிந்து கடந்த ஒருவார காலமாக மீனவர்கள் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என கடலுக்கு சென்று வந்தனர். ஆனால் குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் கோடியக்கரை முதல் வெள்ளப்பள்ளம் வரையான கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால் சுமார் 2000 பைபர் படகுகளில் நாள்தோறும் சென்று வரும் 5000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியவில்லை.
மீனவர்கள் கடும் காற்றினால் மீன்பிடிக்க முடியாமல் வெறும் கையோடு கரைக்கு திரும்பி வந்தனர். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடும் காற்றினால் வலைகள் ஒன்றோடு ஒன்று சிக்கி சேதமடைந்து கரை திரும்பியுள்ளனர். வேதாரண்யம் தாலுக்காவில் இயற்கை சீற்ற காலங்களில் படகை நிறுத்துவதற்கு துறைமுக வசதி இல்லாததால் தங்களது படகுகளை கரையிலும் கடலிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் கடும் காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 45 நாட்கள் தடை காலத்திலேயே அதாவது 15 நாட்களுக்கு முன் கூட்டியே வீசவேண்டிய இந்த தென்றல்காற்று (சூறைக்காற்று) தடைகாலம் முடிந்து தற்போது வீச துவங்கியுள்ளதால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும் இக்காற்று ஓய்வதற்கு ஒருவார காலம் ஆகும் எனவும் அதன்பிறகே மீன்பிடிக்க செல்வோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
வேதாரண்யம் தாலுக்கா, வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடும் சூறைக்காற்றால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.
45 நாட்கள் தடைகாலம் முடிந்து கடந்த ஒருவார காலமாக மீனவர்கள் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என கடலுக்கு சென்று வந்தனர். ஆனால் குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் கோடியக்கரை முதல் வெள்ளப்பள்ளம் வரையான கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால் சுமார் 2000 பைபர் படகுகளில் நாள்தோறும் சென்று வரும் 5000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியவில்லை.
மீனவர்கள் கடும் காற்றினால் மீன்பிடிக்க முடியாமல் வெறும் கையோடு கரைக்கு திரும்பி வந்தனர். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடும் காற்றினால் வலைகள் ஒன்றோடு ஒன்று சிக்கி சேதமடைந்து கரை திரும்பியுள்ளனர். வேதாரண்யம் தாலுக்காவில் இயற்கை சீற்ற காலங்களில் படகை நிறுத்துவதற்கு துறைமுக வசதி இல்லாததால் தங்களது படகுகளை கரையிலும் கடலிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் கடும் காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 45 நாட்கள் தடை காலத்திலேயே அதாவது 15 நாட்களுக்கு முன் கூட்டியே வீசவேண்டிய இந்த தென்றல்காற்று (சூறைக்காற்று) தடைகாலம் முடிந்து தற்போது வீச துவங்கியுள்ளதால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும் இக்காற்று ஓய்வதற்கு ஒருவார காலம் ஆகும் எனவும் அதன்பிறகே மீன்பிடிக்க செல்வோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.