செய்திகள்
மதுவை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறுவது வேடிக்கை: சீமான்
மதுக்கடைகளை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலை மாற்றத்திற்கான தேர்தலாக பார்க்கிறோம்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட தி.மு.க. - அ.தி.மு.க.வை மாற்ற வேண்டும். பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
மே 4-ந் தேதிக்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காண்பீர்கள். தமிழக மீனவர்கள் 840 பேரை இலங்கை ராணுவம் கொலை செய்ததை எந்த கட்சியும் கண்டித்ததா?
ஆந்திராவில் 20 கூலி தொழிலாளிகளை வனத்துறையின் சுட்டு கொன்றார்களே? அதற்கான நடவடிக்கை எடுத்தார்களா?
மதுக்கடைகளை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலை மாற்றத்திற்கான தேர்தலாக பார்க்கிறோம்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட தி.மு.க. - அ.தி.மு.க.வை மாற்ற வேண்டும். பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
மே 4-ந் தேதிக்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காண்பீர்கள். தமிழக மீனவர்கள் 840 பேரை இலங்கை ராணுவம் கொலை செய்ததை எந்த கட்சியும் கண்டித்ததா?
ஆந்திராவில் 20 கூலி தொழிலாளிகளை வனத்துறையின் சுட்டு கொன்றார்களே? அதற்கான நடவடிக்கை எடுத்தார்களா?
மதுக்கடைகளை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.