செய்திகள்

காஞ்சீபுரத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2016-04-07 13:25 IST   |   Update On 2016-04-07 13:25:00 IST
காஞ்சீபுரத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன என கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1400 போலீசார் உள்ளிட்ட 31,645 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தற்போது 100 சதவீத வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பணியில் மாவட்ட நிர்வாகம் பல வகைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவாகவில்லை. எனவே நடப்பு தேர்தலில் இந்நிலை ஏற்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி முழுவீச்சில் பணியாற்றுகிறார்.

தபால் பெட்டிகள், தபால் ஓட்டிற்கான விண்ணப்பங்கள் வழங்குதல் என மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் சுறுசுறுப்படைந்தள்ளன. இதனால் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத தபால் வாக்குகள் இம்முறை பதிவாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News