செய்திகள்
தாம்பரம் மார்க்கெட்டில் தீவிபத்து: 8 கடைகள் எரிந்து நாசம் - பல கோடிக்கு பொருட்கள் சேதம்
தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 கடைகள் எரிந்து சாம்பலானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் சண்முகம் சாலை மிகமுக்கிய வர்த்தக பகுதியாகும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 2 மணி அளவில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரோஜா ஸ்டோர்ஸ் என்ற கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதில் கடையில் வேலைபார்த்த ஊழியர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர். பின்னர் தீ அருகில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடை, காபி கடை உள்பட 8 கடைகளுக்கு பரவியது. தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் பகுதியில் இருந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேறினர்.
தீ எரிந்தபோது எழுந்த கரும்புகை மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இதில் அந்த பகுதியில் வீடுகளில் இருந்தவர்களும், கடைக்காரர்களும் புகைமூட்டம் தாங்காமல் அப்பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் நகராட்சி குடிநீர் லாரிகள், தனியார் குடிநீர் லாரிகளை சம்பவ இடத்திற்கு உடனடியாக கொண்டுவந்து பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மார்க்கெட் பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், இரவு வரை புகைந்து கொண்டே இருந்தது. தீயை கட்டுப்படுத்த ‘ஸ்கை லிப்ட்’ என்ற அதிநவீன தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தீவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த 8 கடைகள், பல கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. சாலையோரத்தில் இருந்த பல சிறிய கடைகளில் இருந்த பொருட்களும் சேதமானது.
அந்த பகுதியில் இதுபோன்ற அசம்பாவித நேரங்களில் உடனடியாக தீயணைப்பு வாகனங்களை கொண்டுவர முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
தீயை அணைக்கும் பணியின்போது த.மு.மு.க.வை சேர்ந்த சதாம்உசேன் என்பவர் தலையில் கடையின் ஷட்டர் விழுந்து காயம் அடைந்தார்.
தீவிபத்து நடந்த பகுதியை தாம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சின்னையா, அனகை முருகேசன், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன், நகர காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் உள்பட அனைத்து கட்சியினரும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் சண்முகம் சாலை மிகமுக்கிய வர்த்தக பகுதியாகும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 2 மணி அளவில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரோஜா ஸ்டோர்ஸ் என்ற கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதில் கடையில் வேலைபார்த்த ஊழியர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர். பின்னர் தீ அருகில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடை, காபி கடை உள்பட 8 கடைகளுக்கு பரவியது. தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் பகுதியில் இருந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேறினர்.
தீ எரிந்தபோது எழுந்த கரும்புகை மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இதில் அந்த பகுதியில் வீடுகளில் இருந்தவர்களும், கடைக்காரர்களும் புகைமூட்டம் தாங்காமல் அப்பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் நகராட்சி குடிநீர் லாரிகள், தனியார் குடிநீர் லாரிகளை சம்பவ இடத்திற்கு உடனடியாக கொண்டுவந்து பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மார்க்கெட் பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், இரவு வரை புகைந்து கொண்டே இருந்தது. தீயை கட்டுப்படுத்த ‘ஸ்கை லிப்ட்’ என்ற அதிநவீன தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தீவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த 8 கடைகள், பல கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. சாலையோரத்தில் இருந்த பல சிறிய கடைகளில் இருந்த பொருட்களும் சேதமானது.
அந்த பகுதியில் இதுபோன்ற அசம்பாவித நேரங்களில் உடனடியாக தீயணைப்பு வாகனங்களை கொண்டுவர முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
தீயை அணைக்கும் பணியின்போது த.மு.மு.க.வை சேர்ந்த சதாம்உசேன் என்பவர் தலையில் கடையின் ஷட்டர் விழுந்து காயம் அடைந்தார்.
தீவிபத்து நடந்த பகுதியை தாம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சின்னையா, அனகை முருகேசன், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன், நகர காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் உள்பட அனைத்து கட்சியினரும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினர்.